பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக
வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…
நீங்களோ உங்கள் பிள்ளைகளோ மேலும் துஷ்பிரயோகத்தில் இருப்பதாக நீங்கள் எண்ணினால் பிரான்சு நீதி முறைமையிலிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வேண்டிக்கொள்ள முடியும். குடும்ப வீட்டிலிருந்து துஷ்பிரயோகம் செய்ப்பவரை வெளியேற்றுவது உட்பட துஷ்பிரயோகம் செய்ப்பவர் உங்களை அணுகுவதை அவர்கள் தடுக்கலாம்
05/10/2023 அன்று ஒலிம்பே ஆல் சரிபார்க்கப்பட்டது
பிரான்சில் வசிக்கும் எவரும் தங்கள் துணைவர் அல்லது தங்களின் முன்னாள் துணைவர் தங்களுக்கு மற்றும்/அல்லது அவர்களின் பிள்ளைகள் மேலும் துஷ்பிரயோகத்தை அனுபவிக்க நேரிடும் என்று அஞ்சும் எவரும் அவர்களுக்கு வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும் அவர்கள் பிரெஞ்சு நீதி அமைப்பிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோரலாம்.
வேகமானதும் மிகவும் பூரணமானதுமான பாதுகாப்பு நடவடிக்கையானது ஒரு “ordonnance de protection”, அல்லது பாதுகாப்பு உத்தரவாகக் கருதப்படுகின்றது. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீதிபதியால் கட்டளையிடப்பட்ட பாதுகாப்பை விரைவாகப் பெற இது உங்களை அனுமதிக்கும்.
குறிப்பெடுத்துக் கொள்வதற்கு சில முக்கியமான தகவல்கள்
உங்கள் விண்ணப்பத்தை முழுமையாகத் தயாரிப்பது முக்கியமாகும். அப்போதுதான் நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த வாய்ப்பு உண்டாகும். நாம் உதவியைப் பெறுவது எவ்வாறு என்பதையும் செயன்முறை எவ்வாறு படிப்படியாகச் செயற்படுகின்றது என்பதையும் கீழே விளக்குகின்றோம்.
“ordonnance de protection” இன் ஒரு பகுதியாக நீதிபதியால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உங்கள் பாதுகாப்பின் பல அம்சங்களைப் பற்றியது, பின்வருவன உட்பட:
இந்த நடவடிக்கைகள் பொதுவாக ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகும், பிறகு அவை புதுப்பிக்கப்படலாம்.
இருப்பினும், “juge aux affaires familiales (JAF)” என்றழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதிக்கு ஆறு மாதங்கள் முடிவதற்குள் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைப் பொறுப்புக் காப்பை ஏற்பாடு செய்யவும், மற்றும்/அல்லது நீங்கள் கோரிக்கையை அனுப்பினால் நீதிபதியின் அடுத்த முடிவு வரை நடவடிக்கைகளும் தானாகவே நீட்டிக்கப்படும்.
இது கட்டாயமில்லை என்றாலும், வீட்டுத் துஷ்பிரயோகத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு வழக்கறிஞரை பணியமர்த்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. “ordonnance de protection” விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
அவர்களின் சேவைகளுக்குப் பணம் செலுத்துவதற்கு உங்கள் வளங்கள் மிகவும் குறைவாக இருந்தால், உங்களுக்கு வதிவிட உரிமைகள் இல்லாவிட்டாலும், செலவுகளை ஈடுகட்ட நீங்கள் சட்ட உதவிக்கு அல்லது “aide juridictionnelle” இற்கு விண்ணப்பிக்கலாம்
“aide juridictionnelle” உடன் “ordonnance de protection” இற்கு விண்ணப்பம் செய்வதற்கு:
“juge aux affaires familiales (JAF)” என அழைக்கப்படும் குடும்ப நீதிமன்ற நீதிபதியிடம் நேரடியாக விண்ணப்பம் செய்யப்படுகிறது.
செயன்முறை சிக்கலானதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் அதைப் பெறுவீர்கள். நீங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
audience” இன் திகதி, நேரம் மற்றும் இருப்பிடத்தைக் குறிப்பிடும் “permis de citer” எனப்படும் ஆவணம் 48 மணி நேரத்திற்குள் “huissier de justice” என அறியப்படும் நீதி முறைமை அதிகாரியால் துஷ்பிரயோகம் செய்தவருக்கு வழங்கப்பட வேண்டும். இதைச் செய்வதற்கு:
துஷ்பிரயோகம் செய்தவர் சரியான நேரத்தில் “permis de citer” ஐப் பெற்றிருந்தாலும், நீதிபதி நிர்ணயித்த சந்திப்பு நேரத்திற்கு அவர் வரவில்லை என்றால், நீதிபதி அவர் பிரசன்னமாகாமல் வழக்கைத் தொடரலாம்.
நீதிபதியுடன் இந்தச் சந்திப்பில் நீங்கள் கலந்துகொள்ளுமாறு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் உங்கள் வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை நீங்கள் தேர்வு செய்யலாம்.
நீதிமன்றத்தில் இந்தச் சந்திப்பு எவ்வாறு கட்டவிழ்க்கப்படும் மற்றும் அதற்கு நீங்கள் எவ்வாறு சிறந்த முறையில் தயாராகலாம் என உங்கள் வழக்கறிஞர் உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும்
நீங்கள் தனி விசாரணையை அல்லது “audition séparée” ஐ கோராமல், துஷ்பிரயோகம் செய்தவரைக் கண்டு நீங்கள் பயப்படுகிறீர்கள் எனில், உங்கள் வழக்கறிஞரிடம் தெரிவிக்கவும்அதன் காரணமாக நீங்கள் நீதிமன்றத்திற்கு வரும் தருணத்திலிருந்து நீங்கள் வெளியேறும் வரை அவர்கள் உங்களுடன் வர முடியும்.
நீங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது ஒரு உரைபெயர்ப்பாளரைக் கோரினால்,“audience” இன் தொடக்கத்தில் உரைபெயர்ப்பாளர் இருப்பதை உங்கள் வழக்கறிஞர் உறுதிசெய்ய முடியும்.
உங்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அதாவது அதிகபட்சம் ஆறு நாட்களுக்குள் நீதிபதி தீர்மானமொன்றெடுப்பார். இரண்டு வழிகளில் ஒன்றில் அவர்களின் தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்:
நீதிபதி உங்கள் விண்ணப்பத்தை நிராகரித்தால், உங்கள் வழக்கறிஞரின் உதவியுடன் மேன்முறையீடு அல்லது “appel” மூலம் இந்த தீர்மானத்தை நீங்கள் சவாலிற்குட்படுத்தலாம்.
நீதிபதியால் “ordonnance de protection” போடப்பட்டிருக்கும் போது வன்முறையில் ஈடுபட்டவர் உங்களை அணுகினால், நீங்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும்.
“procureur de la République” என்று அழைக்கப்படும் ஒரு அரச வழக்கறிஞர் அவர்களைத் தற்காலிகக் காவலில் வைக்க முடிவு செய்யலாம்.
தீவிர ஆபத்துத் தொலைபேசி அல்லது “Téléphone Grave Danger” என்பது குடும்பத் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தீவிரமான நிகழ்வுகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது 24/7 உதவியெண்ணுடன் நேரடியாக இணைக்கப்பட்ட பொத்தானைக் கொண்டுள்ளது. உங்கள் அழைப்பைப் பெறுபவர் உங்களைக் கண்டுபிடித்து பொலிஸாரின் தலையீட்டைக் கோர முடியும்.
இது ஆறு மாத காலத்திற்கு வழங்கி பின்னர் புதுப்பிக்கப்படலாம்.
“Téléphone Grave Danger” (தீவிர ஆபத்துத் தொலைபேசி) பெறுவதற்கு:
துரதிஷ்டவசமாக, நீங்களாகவே கோரிக்கையை வைக்க முடியாது.
"association" எனப்படும் இலவச சேவைகளை வழங்கும் நிறுவனத்தாலோ அல்லது பொலிசாராலோ, வழக்கறிஞராலோ நீங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தைப் புகாரளிக்க வேண்டும். பின்வருவோருக்கு அறிக்கை மேற்கொள்ளப்படலாம்:
ஒரு அறிக்கை செய்யப்பட்டவுடன், பின்வருபவை நடக்கும்:
“Téléphone Grave Danger” ஐ நிர்வகிப்பதற்குப் பொறுப்பான அமைப்பால் தொலைப்பேசி உங்களுக்கு ஒதுக்கப்படுமா இல்லையா என்பது உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும். சூழ்நிலையைப் பொறுத்து, அவர்கள் உங்களுக்குத் தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் தெரிவிக்கலாம். அவர்கள் உங்களுக்கு அடுத்த படிகள் பற்றிய தகவலை வழங்குவார்கள்:
“Téléphone Grave Danger” ஐ அல்லது தீவிர ஆபத்துத் தொலைபேசியைப் பெறும் எந்தவொரு நபரும், அவர்கள் கோரினால், அவர்களுக்கு சமூக வீட்டுவசதி தானாகவே ஒதுக்கப்படும்.
புகார் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்து, ஒரு குற்றவியல் சட்ட நீதிபதி, நீதித்துறைக் கட்டுப்பாட்டு ஆணையை அல்லது “ordonnance de placement sous contrôle judiciaire” ஐ வழங்குவதன் மூலம் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளியை நீதி அமைப்பின் மேற்பார்வையின் கீழ் வைக்க முடிவு செய்யலாம்
உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி கருதினால், துஷ்பிரயோகம் செய்தவர் உங்களை அணுகுவதை அவர் தடுப்பார். இந்தத் தற்காலிக நடவடிக்கை விசாரணை வரை இருக்கும்.
விசாரணையின் போது, துஷ்பிரயோகம் செய்தவருக்கு எதிராகக் குற்றவியல் தடைகளை எடுத்து உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை நீதிபதி எடுக்கலாம்.
உதாரணமாகத் துஷ்பிரயோகம் செய்பவர் நீதிபதியால் தீர்மானிக்கப்பட்ட சில தடைகளுக்கும் கடமைகளுக்கும் இணங்க வேண்டும்,
துரதிஷ்ட வசமாக, இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை நீங்களாகவே கோர முடியாது. இதை நீதிபதியால் மட்டுமே முடிவெடுக்க முடியும்.
“contrôle judiciaire” அமைக்கப்பட்டால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் நீதிமன்றத்தை அழைக்கலாம் அல்லது உங்கள் வழக்கறிஞரிடம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கலாம். நீதிமன்றத்தின் தொடர்பு விவரங்களைக் கண்டறிய, உங்கள் அஞ்சல் குறியீட்டை உள்ளிட்டு “tribunal judiciaire” என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தக் கோப்பகத்தைப் பயன்படுத்தலாம்.
நீதிபதியால் தடைசெய்யப்பட்ட பிறகும் துஷ்பிரயோகம் செய்பவர் உங்களை அணுகினால், நீங்கள் உடனடியாக புகாரைப் பதிவு செய்ய வேண்டும். “détention provisoire” அல்லது தற்காலிகத் தடுப்பு என அழைக்கப்படும் விசாரணை வரை அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி முடிவு செய்யலாம்.
“Centres d'Information sur les Droits des Femmes et des Familles (CIDFF)” பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்வருவன போன்ற பல பகுதிகளில் உதவுகிறது: சட்ட உரிமைகள், சுகாதாரம், வேலைவாய்ப்புத் தேடல்கள், பயிற்சி, வணிக உருவாக்கம் மற்றும் குழந்தை பராமரிப்பு.
"Associations" என்பன பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்களாகும்.
ஒரு வழக்கறிஞரின் பொறுப்பானது, சட்ட நடவடிக்கைகளுக்கு முன், சட்ட நடவடிக்கைகளின் போது மற்றும் சட்ட நடவடிக்கைகளின் பின் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்.
பராமரிப்பைப் பெறல்: உடல் ரீதியாக, பாலியல் ரீதியாக மற்றும் மன ஆரோக்கிய ரீதியாக
வீட்டுத் துஷ்பிரயோகம் உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும். பிரான்சில்,…
மாநில உடல்நலக் காப்பீட்டு அமைப்பு அல்லது “sécurité sociale” உடன் பதிவு செய்தல்
பிரான்சில் உங்களுக்கு நிலையான வேலை அல்லது வசிப்பிடம் இருந்தால், உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்கள்…
உடல்நலக் கவனிப்பு அட்டைக்கு அல்லது “carte vitale”க்கு விண்ணப்பித்தல்
“carte vitale” என்பது உங்கள் சுகாதாரச் செலவுகள் பிரான்சில் எளிதாகத் திருப்பிச் செலுத்தப்படுவதை…